இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டுச் சோதனைகள் (User Evaluation Trials - UET) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த ஏவுகணை பல்வேறு வகையான வான்வழி அச்சுறுத்தல்களை மிகத் துல்லியமாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. சோதனையின் போது, மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் இலக்குகள் முதல், அதிக உயரத்தில் வெகு தொலைவில் உள்ள இலக்குகள் வரை அனைத்தையும் இந்த ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.
இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை சீக்கர் (RF Seeker), இரண்டு நிலைகளில் செயல்படும் திட ராக்ஜெட் மோட்டார் (Dual-pulse solid rocket motor) மற்றும் ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏவுகணை அமைப்பின் அனைத்து உதிரிபாகங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இந்தியத் தொழில்துறையினரின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.


0 Comments