கர்நாடக மாநிலம் கர்வார் கடற்படை தளத்தில் இருந்து கல்வாரி வகையைச் சேர்ந்த ஐஎன்எஸ் வக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பயணத்தைத் தொடங்கினார்.
அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி ஆயுதப் படைகளுடன் சென்றார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த இரண்டாவது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எனப் பதிவிட்டப்பட்டுள்ளது.
கோவா, கா்நாடகம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான குடியரசுத் தலைவரின் 4 நாள்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நீா்மூழ்கிக் கப்பல் பயணம் அமைந்துள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், கடந்த 2006, பிப்.13-இல் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நீா்மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டாா். அவருக்குப் பிறகு நீா்மூழ்கியில் பயணிக்கும் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவா் என்ற பெருமை திரெளபதி முா்மு பெற்றுள்ளார்.
தனது பதவிக் காலத்தில் விமானப் படையின் இரு போா் விமானங்களில் பயணித்த முதல் குடியரசுத் தலைவா் என்ற சிறப்புக்குரிய முா்மு, கடந்த 2023-இல் சுகோய் 30 எம்கேஐ, கடந்த அக்டோபரில் ரஃபேல் என இரு போா்விமானப் பயணங்களை மேற்கொண்டாா்.


0 Comments