முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியான ராஜ்குமார் கோயல் அவர்கள், இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக (CIC) இன்று (டிசம்பர் 15, 2025) பதவியேற்றுக் கொண்டார்.
தலைமைத் தகவல் ஆணையருக்கான பெயரைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு கடந்த வாரம் பரிந்துரைத்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜ்குமார் கோயல் 1990 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் அருணாச்சல பிரதேசம்-கோவா-மிஸோரம்-யூனியன் பிரதேச (AGMUT) பிரிவைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த ஆகஸ்ட் 31, 2025 அன்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நீதித்துறைச் செயலாளராகப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.


0 Comments