ரபேல் விமானம் தயாரிப்பு உள்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து கேட்வே ஆப் இந்தியாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியும், மேக்ரானும் இணைந்து 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026'-ஐ தொடங்கி வைத்தனர்.
மும்பையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, செய்யறிவு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.


0 Comments