19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது.
இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இதில் ஆபரமாக ஆடிய, வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா 50 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்கள் எடுத்து சகல விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த இந்த வெற்றியின் மூலம் இந்தியா 06-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


0 Comments