Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 14 முக்கிய அம்சங்களை மு.க. ஸ்டாலின் அறிவித்தார் / M.K. Stalin announced 14 important aspects for the development of Tamil Nadu

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான 14 முக்கிய அம்சங்களை மு.க. ஸ்டாலின் அறிவித்தார் / M.K. Stalin announced 14 important aspects for the development of Tamil Nadu

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் 'தமிழ்நாடு 2030, கனவுகள் மெய்ப்படும்' என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்து வருகிறார்.

1.80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாகச் சென்று கனவு, தேவைகள் எதிர்பார்ப்புகளை கேட்டுள்ளோம்.

மக்கள் கருத்துகளை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு வளர்ச்சிக்கான 14 அம்சங்களை அறிமுகப்படுத்துகிறேன்-சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் 'கனவு மெய்ப்படும்' நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.

கனவு இல்லத் திட்டத்தில் 2030க்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகள் என மொத்தமாக 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு மூலம் அனைவரும் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவோம்.

2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆதி திராவிடர், பழங்குடியின குடும்பத்திற்கு 
வீட்டு மனைப் பட்டா.

2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் AI ஆய்வகம் உருவாக்கப்படும்.

2030 ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) ஆய்வகம் அமைக்கப்படும்.

நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும்.

அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். அனைவருக்கும் கல்வி என்ற சூழலை உருவாக்குவோம்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1,000 மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்.

ஜவளி ஆடை, தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உறுதிபடுத்தப்படும்.

சிறுபான்மையினர் கடன் பெறும் முறை எளிதாக்கப்படும்.

2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரமே நம் இலக்கு.

3 கோடி லிட்டர் பால் உற்பத்தி 2030ம் ஆண்டில் 4.5 கோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel