இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ₹3,300 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிப்புகளை அசெம்பிள் செய்தல், சோதனை செய்தல் மற்றும் பேக்கேஜிங் செய்யும் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த புதிய ஆலையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கெய்ன்ஸ் செமிகான் ஆலை ஒரு நாளைக்கு சுமார் 6.33 மில்லியன்சிப்புகளை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான திறன் கொண்டது.


0 Comments