Recent Post

6/recent/ticker-posts

2026-27 முதல் 2030-31 நிதியாண்டுகள் வரையிலான ‘சிறிய நீர்மின் சக்தி (SHP) மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves ‘Small Hydro Power (SHP) Development Scheme’ for the Financial Years 2026-27 to 2030-31

2026-27 முதல் 2030-31 நிதியாண்டுகள் வரையிலான ‘சிறிய நீர்மின் சக்தி (SHP) மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet Approves ‘Small Hydro Power (SHP) Development Scheme’ for the Financial Years 2026-27 to 2030-31

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், சுமார் 1500 மெகாவாட் திறன் கொண்ட சிறிய நீர்மின் சக்தி (SHP) திட்டங்களை நிறுவுவதற்காக, ரூ. 2584.60 கோடி ஒதுக்கீட்டில், ‘2026-27 முதல் 2030-31 நிதியாண்டுகள் வரையிலான சிறிய நீர்மின் சக்தி (SHP) மேம்பாட்டுத் திட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம், பல்வேறு மாநிலங்களில் சிறிய நீர்மின் திட்டங்கள் (1 முதல் 25 மெகாவாட் திறன் கொண்டவை) அமைவதற்கு ஆதரவளிக்கும்; குறிப்பாக, இத்தகைய திட்டங்களை அமைப்பதற்கான அதிக ஆற்றல் கொண்ட மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும்.

வடகிழக்கு மாநிலங்களிலும், சர்வதேச எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 3.6 கோடி அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம் - இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை - மத்திய நிதி உதவியாக வழங்கப்படும்; எனினும், ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ. 30 கோடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில், ஒரு மெகாவாட்டிற்கு ரூ. 2.4 கோடி அல்லது திட்டச் செலவில் 20 சதவீதம் - இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகை - வழங்கப்படும்;

இங்கு ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ. 20 கோடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர மற்றும் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் உள்ள சிறிய நீர்மின் சக்தி ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ள இது உதவும்.

இத்தகைய திட்டங்களுக்காக ரூ. 2,532 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சிறிய நீர்மின் சக்தித் துறையில் சுமார் ரூ. 15,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது;

இதன் மூலம் தூய எரிசக்தி முன்னெடுப்புக்கும், தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் முதலீட்டை அதிகரிப்பதற்கும், குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உத்வேகம் கிடைக்கும்.

இம்முதலீட்டின் மூலம், ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான உபகரணங்கள் 100 சதவீதம் உள்நாட்டு மூலங்களிலிருந்தே பெறப்படும்; இது ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றவும் உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel