ஐசிசி பிளேயர் ஆஃப் தி Month பிப்ரவரி மாத விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி, பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஆகியோர் இந்த உயரிய கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.
டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் இவர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20ஐ தொடரில் தனது அபார திறமையால் ஈர்க்க வைத்தார்.
இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல இவர் முக்கிய காரணமாக இருந்தார். தனது சீம் பந்துவீச்சின் மூலம் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.


0 Comments