Recent Post

6/recent/ticker-posts

கோக்ரஜாருக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi Launches Various Projects for Kokrajhar

கோக்ரஜாருக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi Launches Various Projects for Kokrajhar

இரண்டு நாள் பயணமாக அசாம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் குவாஹாட்டி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் அன்பாக வரவேற்றனர்.

கனமழை காரணமாக கோக்ரஜார் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குவாஹாட்டியிலிருந்து காணொலி வாயிலாக ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

அசாமில், காமாக்யா-சர்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், குவாஹாட்டி-புதிய ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் மற்றும் நாரங்கி-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ரயில்வே பராமரிப்புப் பணிகளை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், அம்மாவட்டத்தின் பாஷ்பாரியில் அமையவுள்ள முழுமையான சீரமைப்புப் பணிமனை ஒன்றிற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

முக்கியமான சாலை உள்கட்டமைப்புத் திட்டமான அசாம் மாலா 3.0க்கான பூமி பூஜை நிகழ்விலும் பிரதமர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் கிராமப்புறச் சாலைகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும், இத்திட்டத்தின் கீழ் 900 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், போடோலாந்து பிராந்திய கவுன்சில் பகுதியில் சுமார் ரூ. 1,100 கோடி முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள நான்கு மேம்பாலங்கள் மற்றும் இரண்டு பாலங்களுக்கான பூமி பூஜை நிகழ்விலும் அவர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel