பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தடையற்ற கடல்சார் காப்பீட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரூ.12,980 கோடி மதிப்பிலான அரசுப் பிணையுடன் கூடிய ‘பாரத் கடல்சார் காப்பீட்டுத் தொகுப்பு’ (BMI pool) எனும் உள்நாட்டு காப்பீட்டுத் தொகுப்பை உருவாக்கும் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்தது.
சர்வதேச இடங்களிலிருந்து இந்தியத் துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றி வரும் கப்பல்களுக்கும் (மற்றும் மறுமார்க்கத்திலும்), குறிப்பாக பதற்றமான கடல்சார் வழித்தடங்கள் வழியாகப் பயணிக்கும்போதும், இந்திய வர்த்தகத்திற்குத் தேவையான மலிவு விலை காப்பீடு தொடர்ந்து கிடைப்பதை இத்தொகுப்பு உறுதி செய்கிறது.
மேலும், எண்ணெய் கசிவுப் பொறுப்பு, கப்பல் சிதைவுகளை அகற்றுதல், சரக்கு சேதம், பணியாளர் காயம் மற்றும் அவர்களைத் தாயகம் அனுப்புதல், மோதல் தொடர்பான பொறுப்புகள் போன்ற மூன்றாம் தரப்புப் பொறுப்புகளை ஈடுசெய்யும் P&I காப்பீட்டிற்காக, இந்தியக் கப்பல்கள் ‘சர்வதேச பாதுகாப்பு மற்றும் இழப்பீட்டுக் குழுவை’ (IGP&I Club) பெரிதும் சார்ந்திருக்கின்றன


0 Comments