பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளித்தது; இத்திட்டங்களின் மொத்தச் செலவு சுமார் ரூ.24,815 கோடியாகும்.
வழித்தடங்களின் கொள்ளளவு அதிகரிப்பதன் மூலம் போக்குவரத்து இயக்கம் (mobility) கணிசமாக மேம்படும்; இதன் விளைவாக இந்திய ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனும் சேவை நம்பகத்தன்மையும் உயரும்.
இந்த ‘பலவழித்தடத் திட்டங்கள்’, ரயில்வே செயல்பாடுகளைச் சீரமைக்கவும், வழித்தடங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் பெரிதும் உதவும்.
உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த இரண்டு திட்டங்களின் மூலம், இந்திய ரயில்வேயின் தற்போதைய வழித்தட வலையமைப்பு சுமார் 601 கி.மீ. விரிவடையும்.

0 Comments