ஒரு பெண்ணின் இனப்பெருக்கச் சார்ந்த தன்னாட்சியை மீண்டும் வலியுறுத்தி, 15 வயது சிறுமி ஒருவர் தனது ஏழு மாத கர்ப்பத்தைக் கலைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.
குழந்தை பிறந்த பிறகு தத்தெடுப்பிற்காக வழங்கப்படலாம் என்ற காரணத்தைக் காட்டி, விரும்பாத கர்ப்பத்தைத் தொடருமாறு எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மருத்துவ ரீதியாகக் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால வரம்பை, அச்சிறுமியின் கர்ப்பம் கடந்துவிட்டதால், தனது மகளின் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாகக் கலைத்துக்கொள்ள அனுமதி கோரி அச்சிறுமியின் தாய் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது போன்ற சூழல்களில், பிறக்காத கருவின் நலனை விட அப்பெண்ணின் நலனே முன்னுரிமை பெறும் என்று கூறியது.
"இங்கு முக்கியமானது, பிறக்கப்போகும் குழந்தையின் விருப்பத்தை விட, கர்ப்பிணிப் பெண்ணின் விருப்பமே ஆகும்," என்று அந்த அமர்வு குறிப்பிட்டது.


0 Comments