தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் நியூஸி.வர்த்தகத் துறை அமைச்சர் டாட் மெக்லேவும் கையெழுத்திட்டனர்.
வேளாண்மை, ஜவுளி, மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிகச் சேவைகள், கல்வி, கட்டுமானம், சுகாதாரம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்கீழ், சுமார் 8,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருள்களை எந்த கூடுதல் வரியுமின்றி, நியூசிலாந்துக்கு ஏற்றுமதி
செய்ய முடியும்.
2025 மார்ச்சில் தொடங்கப்பட்ட இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை 9 மாதங்களிலேயே டிசம்பரில் முடிக்கப்பட்டது. இந்தியாவின் மிக வேகமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உட்பட சுமார் 8,284 பொருட்களுக்கு நியூசிலாந்தில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும். மேலும், நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் கம்பளி, மரம், நிலக்கரி, பழங்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்.
இருப்பினும், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பொருட்கள், வெங்காயம், பருப்பு வகைகள், சர்க்கரை போன்ற பல துறைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த 5,000 நிபுணர்களுக்கு விசா வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய நியூஸி. உறுதியளித்துள்ளது.
தற்போது 1.3 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்ட இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.


0 Comments