'ஜீஈஈஎப் உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு விருதுகள் 2026' விழாவில், "2026 ஆம் ஆண்டின் சிறந்த உலகளாவிய சுற்றுச்சூழல் தலைமைத்துவ திட்டம்" என்ற உயரிய விருது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் மெட்ரோ ரெயில் பிரிவில் வழங்கப்படும் இந்த சர்வதேச அங்கீகாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நகர வளர்ச்சியில் சென்னை மெட்ரோ மேற்கொண்ட முன்னோடியான முயற்சிகளுக்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெருமைக்குரிய விருது வழங்கும் விழா, வரும் மே 22-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள உலகளாவிய எரிசக்தித் தலைவர்கள் உச்சி மாநாட்டில் நடைபெற உள்ளது.
சென்னை மெட்ரோ திட்டத்தின் திட்டமிடல் தொடங்கி கட்டுமானம் மற்றும் தினசரி இயக்கம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கை பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து செயல்பட்ட விதமே இந்த விருதிற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் வளமிக்க பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வழித்தடங்களில் மாற்றங்கள் செய்ததிலிருந்து, நிலையங்கள் மற்றும் உயர்மட்டப் பாதைகளில் பசுமை வடிவமைப்பு அம்சங்களை உருவாக்கியது வரை பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


0 Comments