முன்னதாக பருத்தி மீது 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஜவுளித் துறைக்கான பருத்தி இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் 'வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம்' (Agriculture Infrastructure and Development Cess) ஆகியவற்றில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும், இந்த வரி ரத்து நடவடிக்கையானது, வரும் ஜூன் 01 முதல் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய ஜவுளித் துறைக்கான பருத்தி இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


0 Comments