நார்வேயில் நடைபெற்ற இந்தியா-நோர்டிக் உச்சிமாநாடு, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கான இருதரப்பு பயணங்களை முடித்துக் கொண்டு, தனது 6 நாள் ஐரோப்பிய பயணத்தின் இறுதிப் பகுதியாக பிரதமர் மோடி இத்தாலி சென்றார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம், பசுமை ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் ரோம் நகரில் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு 'சிறப்பு உத்திசார் கூட்டாண்மை' (Special Strategic Partnership) என்ற புதிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பெருவழிப்பாதையின் (IMEEC) மேற்கு நங்கூரமாக இத்தாலி செயல்படுகிறது. கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை நவீனப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசியா மற்றும் ஈரான் நெருக்கடிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்திய செவிலியர்கள் இத்தாலியில் பணிபுரிவதற்கான இடம்பெயர்வு ஒப்பந்தம், உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டாண்மை, ஆயுர்வேதம், விவசாயம் மற்றும் இந்திய கடல்சார் உணவுப் பொருட்களை இத்தாலிக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன.


0 Comments