பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர் பிரதாப் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்றை கண்டெடுத்தார்.
கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த பழைய கற்கால கருவி சுமார் 7.8 செ.மீ நீளமும் , 5.7 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.
கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கல் ஆயுதம் மேலை பழங்கற்காலத்தை சேர்ந்த சுரண்டும் வகையைச் சேர்ந்த பழங்கால கல் ஆயுதமாகும். இதன் காலம் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.

0 Comments