பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில், குஜராத் மாநிலம் வதினார் நகரில் அதிநவீன கப்பல் பழுதுபார்க்கும் வசதியை மேம்படுத்துவதற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது நாட்டின் கப்பல் பழுதுபார்க்கும் கட்டமைப்பில் ஒரு முக்கிய விரிவாக்கமாக அமைகிறது. இத்திட்டம், தீன்தயாள் துறைமுக ஆணையம் (DPA) மற்றும் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் (CSL) ஆகிய நிறுவனங்களால் கூட்டாகச் செயல்படுத்தப்பட உள்ளது;
இதற்கான மொத்த முதலீட்டுத் தொகை ரூ.1,570 கோடியாகும். இத்திட்டமானது, 650 மீட்டர் நீளமுள்ள ஒரு கப்பல்துறை (jetty), இரண்டு பெரிய மிதக்கும் உலர் கப்பல்துறைகள் (floating dry docks), பணிமனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல்சார் உள்கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு 'பிரவுன்ஃபீல்ட்' (brownfield) வசதியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.


0 Comments