டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 11-வது நிதி ஆயோக் குழு (NITI Aayog Governing Council) கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், "2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற கருப்பொருளில் நடக்கிறது.
தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், பொருளாதார முன்னேற்றம், மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர்.


0 Comments