ஜவுளித் துறை வளர்ச்சிக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், 22 புதிய விண்ணப்பதாரர்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ 2,339.14 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்ட தயாரிப்புகள் வாயிலாக ரூ.15,561.34 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும், இத்துறையில், 36,217 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூன்றாம் சுற்றில், மொத்தம் 96 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் ரூ.12,822.67 கோடி முதலீடும், ரூ.58,294.18 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
%20Scheme%20for%20the%20Textile%20Sector.jpg)

0 Comments