Recent Post

6/recent/ticker-posts

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி / India's First Hydrogen-Powered Train Trial Run Successful

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி / India's First Hydrogen-Powered Train Trial Run Successful

இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் "ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்" தனது இறுதி அதிவேகப் பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

ஹரியானா மாநிலத்தின் ஜீந்த் - சோனிபட் ரயில்வே வழித்தடத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி சோதனை நடத்தப்பட்டது. இப்பரிசோதனையின் போது இந்த ரயில், மணிக்கு 120 கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் தடத்தில் பாய்ந்து சென்று சாதனை படைத்தது.

சென்னை ICF-இல் வடிவமைக்கப்பட்ட 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், 1,200 கிலோவாட் திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் கலன் உந்துவிசை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

புகை மற்றும் மாசுவை முற்றிலும் உமிழாத இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்பம், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வேதிவினையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்குகிறது. மேலும் இது கழிவாக வெறும் தண்ணீர் நீராவியை மட்டுமே வெளியேற்றுகிறது.

இந்த புதிய மைல்கல்லின் மூலம், ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலகின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வேயை முற்றிலும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு கொண்டதாக மாற்றுவதில் இந்த ஹைட்ரஜன் ரயில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel