பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002 பிரிவு 39-ன் கீழ், ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையப் பரிந்துரையின் அடிப்படையிலும், அந்த முன்மொழிவை முறையாகப் பரிசீலித்த பின்னரும், 2026 ஜூன் 19 அன்று இந்த நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பின் மூலம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்தியாவின் 21வது அங்கீகரிக்கப்பட்ட களஞ்சியமாகிறது. இது நாட்டின் பல்லுயிர் பாதுகாப்பு, அறிவியல் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.


0 Comments