தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறை வாரியங்களின் தலைவர்கள் மாற்றப்பட்டு வரும் வேளையில் இந்த முக்கிய நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களிடம் இருந்து புதிய பொறுப்பிற்கான நியமன ஆணையை லயோலா மணி முறைப்படி பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி, இப்பதவியில் அடுத்த 3 ஆண்டுகள் நீடிப்பார் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments