நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிராந்திய விமான இணைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையிலும், உலகத் தரம் வாய்ந்த விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையிலும், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) 'உடான்' திட்டத்தின் அடுத்த கட்டமான விக்சித் உடான் திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவு கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய கலாச்சாரம் - சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.


0 Comments