ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் சேவையை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலை பயணிகள் பயன்பாட்டிற்க்காக பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்துள்ளார். துவக்க விழாவில் பிரதமர் மோடியுடன் ஹரியானா முதல்வர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ரயிலின் முதல் பயணத்தில் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் மிகுந்த உற்சாகத்துடன் பயணித்தனர். கார்பன் உமிழ்வை முற்றிலும் பூஜ்ஜியமாக (Zero Carbon Emission) குறைக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் ரயில்களுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள இந்த ஹைட்ரஜன் ரயில், கார்பன் உமிழ்வை (Carbon Emission) பூஜ்ஜியமாகக் குறைக்கும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் இயக்கத்தின் போது நீரும், நீராவியும் மட்டுமே வெளியேறும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான மாசும் ஏற்படாது.


0 Comments