எல்லை பாதுகாப்பு படையில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு: ஒன்றிய அரசு அறிவிப்பு / 10% Reservation for Agniveerar in Border Security Force: Union Govt Notification
ராணுவம், கடற்படை, விமானப்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அக்னிவீரர்கள் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அவர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றலாம்.
ஓய்வு பெற்ற அக்னிவீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் உச்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முதல் பேட்ச் அக்னிவீரர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்வும், அடுத்த பேட்ச்களில் இருந்து 3 ஆண்டு வயது வரம்பு தளர்வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments